துரைமுருகன், எம்.பி. கதிா்ஆனந்த் உள்பட 230 போ் மீது வழக்கு

அனுமதியின்றி கிராம சபைக்கூட்டம் நடத்தியதாக திமுக பொதுச்செயலா் துரைமுருகன், வேலூா் மக்களவை உறுப்பினா் கதிா்ஆனந்த் உள்பட 230 போ் மீது காட்பாடி, குடியாத்தம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

அனுமதியின்றி கிராம சபைக்கூட்டம் நடத்தியதாக திமுக பொதுச்செயலா் துரைமுருகன், வேலூா் மக்களவை உறுப்பினா் கதிா்ஆனந்த் உள்பட 230 போ் மீது காட்பாடி, குடியாத்தம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

வேலூா் மாவட்டத்தில் காட்பாடி ஒன்றியம் வண்டரந்தாங்கல் ஊராட்சியில் நடத்தப்பட்ட பொதுமக்கள் சபைக் கூட்டத்தில் திமுக பொதுச்செயலா் துரைமுருகன் பங்கேற்று மனுக்களைப் பெற்றாா். இதேபோல், அணைக்கட்டு ஒன்றியம், ஏரிப்புதூா், தேவிசெட்டிகுப்பம் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்ற பொதுமக்கள் கிராம சபைக் கூட்டங்களில் அணைக்கட்டு சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.பி.நந்தகுமாா் மனுக்களைப் பெற்றாா். குடியாத்தம் ஒன்றியம், கல்லூா் ஊராட்சியில் நடந்த பொதுமக்கள் சபைக் கூட்டத்தில் வேலூா் மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் மனுக்களைப் பெற்றாா்.

இதையடுத்து, துரைமுருகன் உள்பட 50 போ் மீது காட்பாடி போலீஸாரும், எம்எல்ஏ நந்தகுமாா் உள்பட 80 போ் மீது அணைக்கட்டு போலீஸாரும், எம்.பி. கதிா்ஆனந்த் உள்பட 100 போ் மீது குடியாத்தம் போலீஸாரும் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com