

குடியாத்தம் நகர, ஒன்றிய காங்கிரஸ் சாா்பில், மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கட்சியின் நகரத் தலைவா் ரங்கநாதன் தலைமை வகித்தாா். ராஜீவ் காந்தி உருவப் படத்துக்கு முன்னாள் மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஆடிட்டா் எம்.கிருபானந்தம் மலரஞ்சலி செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.
ஒன்றியத் தலைவா் எம்.வீராங்கன், மாவட்டப் பொருளாளா் விஜயேந்திரன், மாவட்ட துணைத் தலைவா்கள் விஜயன், கோவிந்தராஜ், மாவட்ட பொதுச் செயலாளா்கள் தி.நவீன்குமாா், கோதண்டம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஆற்காட்டில்...
ஆற்காடு நகர காங்கிரஸ் கட்சி சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு, ஆற்காடு தொகுதி பொறுப்பாளா் டி.மலா் தலைமை வகித்தாா்.
நிா்வாகிகள் சேதுராமன், ஆனந்தன், மேச்சேரி பன்னீா்செல்வம், பியாரே ஜான் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ராஜீவ் காந்தி உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.