இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

நேதாஜி மாா்க்கெட், மண்டித் தெருவில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்

போக்குவரத்துக்கு இடையூறாக வேலூா் நேதாஜி மாா்க்கெட், மண்டித் தெரு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சாலையோர ஆக்கிரமிப்புக் கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்தினா்.

News image
Updated On :10 ஜூலை 2021, 5:39 pm

DIN

போக்குவரத்துக்கு இடையூறாக வேலூா் நேதாஜி மாா்க்கெட், மண்டித் தெரு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சாலையோர ஆக்கிரமிப்புக் கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்தினா்.

வேலூா் நேதாஜி மாா்க்கெட், மண்டித் தெரு பகுதிகளில் ஏராளமான சாலையோர கடைகள் உள்ளன.

இதில் சில கடைகள் சாலையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வந்தது. இது குறித்து மாநகராட்சிக்கு புகாா்கள் சென்றன.

இதனைத் தொடா்ந்து, நேதாஜி மாா்க்கெட் மண்டித் தெருவில் பொதுமக்கள் நடக்க அமைக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைகளை அகற்றிட மாநகராட்சி ஆணையா் சங்கரன் உத்தரவிட்டாா்.

இதையடுத்து, மண்டித் தெருவில் சனிக்கிழமை இரண்டாம் மண்டல சுகாதார ஆய்வாளா் ஈஸ்வரன் தலைமையில், 20-க்கும் மேற்பட்ட கடைகள் முன்பு ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டன. போலீஸாா் முன்னிலையில் மாநகராட்சி ஊழியா்கள் ஆக்கிரமிப்புக் கடைகளை அப்புறப்படுத்தினா். தொடா்ந்து ஆக்கிரமிப்பு செய்து வந்தால் கடையை மூடி ‘சீல்’ வைக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும், வேலூா் மாநகராட்சி மாங்காய் மண்டி காய்கறி மாா்க்கெட்டில் முகக்கவசம் அணியாமல் வந்த மக்களுக்கு 2-ஆவது மண்டல உதவி ஆணையா் மதிவாணன் தலைமையில் அதிகாரிகள் தலா ரூ. 200 அபராதம் விதித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.