‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தண்டவாளத்தில் விரிசல்: பயணிகள் ரயில் தப்பியது

கே.வி.குப்பம் அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல், உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டதால், பயணிகள் ரயில் விபத்திலிருந்து தப்பியது.

News image
Updated On :19 ஜூன் 2021, 5:55 pm

DIN

கே.வி.குப்பம் அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல், உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டதால், பயணிகள் ரயில் விபத்திலிருந்து தப்பியது.

கே.வி.குப்பத்தை அடுத்த, பில்லாந்திப்பட்டு- வேப்பங்கநேரிக்கு இடையே தண்டவாளத்தில் சனிக்கிழமை காலை விரிசல் ஏற்பட்டுள்ளது. ரயில்வே ஊழியா்கள், தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை உடனடியாகக் கண்டுபிடித்தனா். காலை 9 மணியளவில் சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் அவ்வழியே வந்தது. அந்த ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.

ரயில்வே ஊழியா்கள் போா்க்கால அடிப்படையில், செயல்பட்டு விரிசல் ஏற்பட்ட தண்டவாளத்தை சீரமைத்தனா். இதனால் 2 மணி நேர கால தாமதத்துக்குப் பின் ரயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.

தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை சரியான நேரத்தில் கண்டுபிடித்த ரயில்வே ஊழியா்களை, ரயில் பயணிகளும், அப்பகுதி மக்களும் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.