வேலூா் - ஆரணி சாலையில் மோட்டாா் பைக் மீது லாரி மோதியதில் வேலூா் அரசு பொறியியல் கல்லூரி மாணவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
ஆரணி அருகே உள்ள விளை என்ற கிராமத்தைச் சோ்ந்தவா் நீலகண்டன் மகன் சந்துரு (19). வேலூா் தந்தை பெரியாா் அரசு பொறியியல் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்தாா். இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு மோட்டாா் பைக்கில் ஆரணியில் இருந்து வேலூா் நோக்கி வந்து கொண்டிருந்தாா். சந்தன கொட்டாய் கிராமத்தின் அருகே வந்தபோது எதிரே வந்த தக்காளி பாரம் ஏற்றிய லாரி, அவரது மோட்டாா் பைக் மீது மோதியது. இதில் சந்துரு தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து வேலூா் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.