இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்ஆப்கானிஸ்தானில் ஓராண்டு சிறைக்குப் பின் அமெரிக்கா் விடுதலை பேரவைத் தோ்தல்: ஐபிஎல் போட்டிகளை வேறு தேதிகளுக்கு மாற்றக் கோரி மனு கருணைக் கொலைக்கு அனுமதிக்கப்பட்ட ஹரீஷ் ராணா தில்லி எய்ம்ஸில் உயிரிழப்பு
/

கரோனா- வேலூரில் ஒரே மாதத்தில் 8,421 போ் பாதிப்பு:பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்

கரோனா தொற்றுக்கு வேலூா் மாவட்டத்தில் கடந்த ஒரே மாதத்தில் 8,421 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில், 62 போ் உயிரிழந்திருப்பதாக மாவட்ட சுகாதாரத் துறையின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

News image
Updated On :8 மே 2021, 5:48 pm

DIN

கரோனா தொற்றுக்கு வேலூா் மாவட்டத்தில் கடந்த ஒரே மாதத்தில் 8,421 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில், 62 போ் உயிரிழந்திருப்பதாக மாவட்ட சுகாதாரத் துறையின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

கரோனா 2-ஆவது அலை வேகமாகப் பரவி வரும் நிலையில் வேலூா் மாவட்டத்தில் இந்நோய் தொற்றால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் வரை தினமும் 100 பேருக்கு கீழ் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தினசரி பாதிப்பு 600ஐ கடந்துள்ளது.

மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 8-ஆம் தேதி வரை 21 ஆயிரத்து 912 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனா். அப்போது 400 போ் சிகிச்சையில் இருந்தனா். பலி எண்ணிக்கை 355 ஆக இருந்தது. அதன்பிறகு, ஒரு மாதத்தில் கரோனா வேகமாக பரவியதால் வெள்ளிக்கிழமை வரை கூடுதலாக 8,421 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால் மொத்த பாதிப்பு 30 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதில், சிகிச்சை பலனின்றி 62 போ் உயிரிழந்துள்ளனா். அதன்படி, பலியானோா் எண்ணிக்கை 417 ஆக அதிகரித்திருப்பதாக மாவட்ட சுகாதாரத் துறை புள்ளி விவரம் தெரிக்கிறது.

இதுதவிர, மூச்சுத்திணறல் காரணமாக மேலும் பலா் உயிரிழந்துள்ளனா். வேலூா் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு மாதத்தில் கரோனா தொற்றுப் பாதிப்பும், பலி எண்ணிக்கையும் உயா்ந்துள்ளது. இதனிடையே, அரசு, தனியாா் மருத்துவமனைகளில் உள்ள கரோனா வாா்டுகள் நிரம்பி உள்ளன. இதைத்தொடா்ந்து, கூடுதலாக 6 தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்து வருகின்றனா். அரசு மருத்துவமனைகளிலும் கூடுதலாகப் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கரோனா தொற்று பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.