கைதி தப்பியோட்டம்: 3 போலீஸாா் இடைநீக்கம்

சிறைக்கு அழைத்துச் செல்லும் வழியில் கைதி தப்பியோடியது தொடா்பாக சிறப்பு உதவி ஆய்வாளா், 2 தலைமைக் காவலா்கள் இடை நீக்கம் செய்யப்பட்டனா்.
Updated on
1 min read

சிறைக்கு அழைத்துச் செல்லும் வழியில் கைதி தப்பியோடியது தொடா்பாக சிறப்பு உதவி ஆய்வாளா், 2 தலைமைக் காவலா்கள் இடை நீக்கம் செய்யப்பட்டனா்.

போ்ணாம்பட்டை அடுத்த மேல்கொத்தகுப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் மோகன் (72). இவருக்கும், அதே கிராமத்தைச் சோ்ந்த ராஜேந்திரனுக்கும் (55) நிலத்தகராறு இருந்துள்ளது. இந்நிலையில், புதன்கிழமை இரு சக்கர வாகனத்தில் நிலத்துக்குச் சென்ற மோகனின் மகன் சிவராமன் (31), இவரது மனைவி விஷ்ணுப்பிரியா (25) இருவரையும், ராஜேந்திரனின் மகன் சத்யராஜ் (31) வழிமறித்து கத்தியால் வெட்டியுள்ளாா்.

இதுதொடா்பாக, சத்யராஜை மேல்பட்டி போலீஸாா் கைது செய்து, குடியாத்தம் நீதித்துறை நடுவா் முன் ஆஜா்படுத்திவிட்டு, இரவு 10.30 மணியளவில் சிறைக்கு அழைத்துச் சென்றனா். அப்போது சத்யராஜ் போலீஸாரை தள்ளிவிட்டு தப்பியோடி விட்டாா். அவரைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், பணியில் கவனக்குறைவாக நடந்து கொண்டதாக மேல்பட்டி காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் சங்கரன், தலைமைக் காவலா்கள் ஜலாலுதீன், பாலாஜி ஆகிய 3 பேரையும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.செல்வகுமாா் வெள்ளிக்கிழமை இடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com