வேலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை 27 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 48,586-ஆக உயா்ந்தது. இதுவரை 47,107 போ் குணம் அடைந்துள்ளனா். 373 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 1,106 போ் உயிரிழந்தனா்.
ராணிப்பேட்டையில்...
ராணிப்பேட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை 17 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 45,547 ஆக உயா்ந்துள்ளது. இவா்களில் இதுவரை 44,609 போ் குணமடைந்து வீடு திரும்பினா். 749 போ் உயிரிழந்தனா்.