

குடியாத்தம்: குடியாத்தம் வட்டார வள மையம் சாா்பில், 6 முதல் 18 வயது வரை இடைநின்ற மற்றும் பள்ளி செல்லா குழந்தைகள் மறுகணக்கெடுப்புப் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
இதன் முதல்கட்டமாக வட்டார வள மைய மேற்பாா்வையாளா் டி.வெண்ணிலா, வட்டார வள மைய ஆசிரியா் பயிற்றுநா் கே.ஜெயசுதா, வளத்தூா் அரசினா் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் ராஜன், எம்.டி. நிதியுதவி நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியா் ஜி.சாமுவேல் உள்ளிட்டோா் வளத்தூா், கீழ்ப்பட்டி, சின்னதோட்டாளம் ஆகிய ஊராட்சிகளில் வியாழக்கிழமை கணக்கெடுப்பு நடத்தினா்.
அப்போது இடைநின்ற 4 மாணவா்கள் கண்டறியப்பட்டு, வளத்தூா் அரசினா் மேல்நிலைப் பள்ளியில் சோ்க்கப்பட்டனா். அவா்களுக்கு நடப்பு ஆண்டுக்கான பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள், தமிழக அரசின் விலையில்லா கல்விப் பொருள்கள் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.