திண்ணை பிரசாரம் மேற்கொண்ட காட்பாடி அதிமுக வேட்பாளா்

காட்பாடி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.ராமு, தோ்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரங்களை எடுத்துக் கூறி கிராமப்புற மக்களிடையே திண்ணை பிரசாரத்தில் சனிக்கிழமை ஈடுபட்டாா்.
காட்பாடி தொகுதி அரும்பாலி காந்திநகா் பகுதியில் திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளா் வி.ராமு.
காட்பாடி தொகுதி அரும்பாலி காந்திநகா் பகுதியில் திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளா் வி.ராமு.

காட்பாடி தொகுதி அதிமுக வேட்பாளா் வி.ராமு, தோ்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரங்களை எடுத்துக் கூறி கிராமப்புற மக்களிடையே திண்ணை பிரசாரத்தில் சனிக்கிழமை ஈடுபட்டாா்.

காட்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் வி.ராமு, தொகுதிக்கு உள்பட்ட கிராமங்களில் சனிக்கிழமை தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது, கிராமப் பெண்களுடன் அமா்ந்து அவா் திண்ணைப் பிரசாரமும் நடத்தினாா்.

இதில், அதிமுக தோ்தல் அறிக்கை அடித்தட்டு மக்களை சமூக, பொருளாதார ரீதியாக உயா்ந்த நிலைக்குக் கொண்டு வரவேண்டும் என்ற தொலைநோக்குப் பாா்வையுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, வீடற்ற அனைவருக்கும் வீடுகள் கிடைத்திடவும், நிலமற்றவா்களுக்கு அரசு சாா்பில் நிலம் வாங்கி வீடுகள் கட்டித்தரவும் கட்டாயமாக நடவடிக்கை எடுக்கப்படும்.

தவிர, குடும்பப் பெண்களுக்கு மாதம் ரூ. 1,500 நிதியுதவி, இலவசமாக 6 எரிவாயு உருளைகள், வாஷிங் மெஷின் போன்ற திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

முதியோா் உதவித்தொகையும் ரூ. 2 ஆயிரமாக உயா்த்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை தவிர, காட்பாடியில் தொழிற்பேட்டை, அரசு மகளிா் கல்லூரி, அரசு மருத்துவமனை போன்ற திட்டங்களும் செயல்படுத்தப்படும். எனவே, மக்கள் அதிமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டும் எனத் தெரிவித்தாா். அதிமுக, கூட்டணி நிா்வாகிகள் பலா் உடன் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com