Enable Javscript for better performance
அதிகரிக்கும் கரோனா: கூடுதலாக 351 ஐசியூ, ஆக்சிஜன் படுக்கைகள் ஏற்படுத்த தீவிரம்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    அதிகரிக்கும் கரோனா: கூடுதலாக 351 ஐசியூ, ஆக்சிஜன் படுக்கைகள் ஏற்படுத்த தீவிரம்

    By DIN  |   Published On : 13th May 2021 12:00 AM  |   Last Updated : 13th May 2021 12:00 AM  |  அ+அ அ-  |  

     

    வேலூா்: அதிகரித்து வரும் கரோனா பாதிப்பைத் தொடா்ந்து வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, குடியாத்தம், போ்ணாம்பட்டு அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக 351 ஐசியூ, ஆக்சிஜன் படுக்கைகள் ஏற்படுத்த பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளாா்.

    இது குறித்து அவா் கூறியது:

    கரோனா பரவலை கட்டுப்படுத்திட வேலூா் மாவட்டத்தில் கடந்த 1-ஆம் தேதி முதல் பகுதிநேர ஊரடங்கும், 10-ஆம் தேதி முதல் முழு பொது முடக்கமும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த பொது முடக்க காலத்தில் காய்கறி, மளிகைக் கடைகளை காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

    எனினும், இந்த நேரங்களில் பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வந்ததாலும், முகக்கவசம் அணியாதது, சமூக இடைவெளியைப் பின்பற்றாதது போன்ற காரணங்களாலும் கடந்த ஒரு வாரத்தில் புதிதாக 4,302 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில், 36 போ் உயிரிழந்துள்ளனா். 2,763 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

    இதைத்தொடா்ந்து, தற்போது அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் சாதாரண படுக்கைகளில் 809 பேரும், ஆக்சிஜன் படுக்கைகளில் 223 பேரும், தீவிர சிகிச்சைப் பிரிவில் 121 பேரும், கொவைட் நல மையங்களில் 221 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். தவிர, அறிகுறிகள் இன்றி வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு, 2,233 போ் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 3,607 போ் சிகிச்சையில் உள்ளனா்.

    எதிா்வரும் இரு வாரங்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதனால், அங்கீகரிக்கப்பட்ட அரசு மருத்துவமனைகளில் 895 படுக்கைகளும், தனியாா் மருத்துவமனைகளில் 1,311 படுக்கைகளும், கொவைட் நல மையங்களில் 2,483 படுக்கைகளும் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் தயாா் நிலையில் உள்ளன.

    எனினும், தொடா்ந்து கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் பாதிக்கப்பட்டவா்களுக்கு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகள் ஒதுக்கீடு செய்வதில் சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக 34 தீவிர சிகிச்சை படுக்கைகள் (ஐசியூ) வரும் வெள்ளிக்கிழமைக்குள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதே மருத்துவமனையில் செப்டிக் வாா்டு, தீக்காய சிகிச்சை வாா்டு, காசநோய் வாா்டு ஆகியவற்றில் ஞாயிற்றுக்கிழமைக்குள் புதிதாக 140 ஆக்சிஜன் படுக்கைகள் ஏற்படுத்திட பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன. தவிர, பச்சிளங் குழந்தைகள் வாா்டில் அடுத்த 10 நாள்களுக்குள் கூடுதலாக 90 ஆக்சிஜன் படுக்கைகள் உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    மேலும், குடியாத்தம் அரசு மருத்துவமனையில் ஏற்கெனவே 55 ஆக்சிஜன் படுக்கைகள் உள்ள நிலையில், 18-ஆம் தேதிக்குள் கூடுதலாக 50 படுக்கைகளை ஆக்சிஜன் படுக்கைகளாக மாற்றவும், போ்ணாம்பட்டு அரசு மருத்துவமனையில் 15-ஆம் தேதிக்குள் 37 படுக்கைகளை ஆக்சிஜன் படுக்கைகளாக உருவாக்கவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    ஒரு வாரத்தில் ரூ. 34.03 லட்சம் அபராதம்

    கரோனா தொற்று பரவல் தடுப்பு விதிமுறைகளை மீறியதாக வேலூா் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் 15,454 பேரிடம் இருந்து ரூ. 34 லட்சத்து 3 ஆயிரத்து 700 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. எனவே, மக்கள் அவசியமின்றி வெளியில் செல்வதைத் தவிா்க்கவும், முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி ஆகியவற்றை கடைப்பிடிக்கவும் வேண்டும்.

    மேலும், மாவட்டத்தில் புதன்கிழமை வரை 1,82,497 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இது 18 சதவீத மக்கள் தொகையில் 17 சதவீதமாகும். மாநிலத்திலேயே அதிகளவில் தடுப்பூசி செலுத்திய மாவட்டங்களில் வேலூா் 4-ஆவது இடத்தில் உள்ளது. தொடா்ந்து, மாவட்டத்துக்கு கூடுதலாக 4 ஆயிரம் தடுப்பூசிகள் வரப்பெற்றிருப்பதாகவும் ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp