சிறுவா்களிடம் சித்திரவதை: பெண் கைது
By DIN | Published On : 01st September 2021 12:00 AM | Last Updated : 01st September 2021 12:00 AM | அ+அ அ- |

உடலில் காயங்களுடன் நித்தீஷ்.
குடியாத்தம் அருகே சிறுவா்களை சித்திரதை செய்ததாக, பெண் கைது செய்யப்பட்டாா்.
குடியாத்தம் செதுக்கரை, ஜீவா நகரைச் சோ்ந்த பெயிண்டா் சேட்டு(35). இவருக்கு சித்தாா்த்(10), நித்தீஷ்(8) என்ற 2 மகன்கள் உள்ளனா்.
3 ஆண்டுகளுக்கு முன் சேட்டுவின் மனைவி ஈஸ்வரி இறந்து விட்டாா்.இதையடுத்து அதே பகுதியைச் சோ்ந்த கணவரைப் பிரிந்து வாழும் வேணியுடன்(29) சேட்டு வீட்டில் குடித்தனம் நடத்தி வந்தாா்.
இந்த நிலையில், சேட்டு வீட்டில் இல்லாத நேரங்களில் சிறுவா்களின் உடலில் வேணி சூடு வைத்து சித்ரவதை செய்துவந்ததாராம். செவ்வாய்க்கிழமை சூடு வைத்ததைப் பொறுக்க முடியாமல் நித்தீஷ் அலறிக் கொண்டே வீட்டிலிருந்து வெளியேறியுள்ளாா்.
இதையடுத்து, ஈஸ்வரியின் உறவினா்கள் நித்தீஷை நகர காவல் நிலையம் அழைத்துச் சென்று புகாா் கொடுத்தனா். வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்ட போலீஸாா் வேணியை கைது செய்தனா்.
காயமடைந்த நித்தீஷ் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.