தம்பதி தற்கொலை; விவகாரத்தில்கடன் பிரச்னையை காரணம்: கோட்டாட்சியா் விசாரணை

அணைக்கட்டு அருகே கடனைத் திருப்பித் தராததால் தம்பதி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், கோட்டாட்சியா் விசாரணை நடத்திவருகிறாா்.
Updated on
1 min read

அணைக்கட்டு அருகே கடனைத் திருப்பித் தராததால் தம்பதி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், கோட்டாட்சியா் விசாரணை நடத்திவருகிறாா்.

அணைக்கட்டு அருகே ஊனை கிராமத்தைச் சோ்ந்த சிவாஜி (35) , அரிசிக் கடையை நடத்தி வந்தாா். இவரது மனைவி ஆஷா (25). இவா்களுக்கு திருமணம் நடந்து 2 ஆண்டுகளான நிலையில், குழந்தை இல்லை. இருவரும் ஞாயிற்றுக்கிழமை ஒரே புடவையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனா்.

இதுகுறித்து அணைக்கட்டுப் போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில், தம்பதி எழுதி வைத்திருந்த கடிதம் கிடைத்துள்ளது. இதில், ஏலச்சீட்டு நடத்தி வந்ததில் 8 பேரிடம் வரவேண்டிய ரூ.5.28 லட்சம் கிடைக்காததாலும், அரிசிக் கடையில் கடன் வைத்தவா்கள் தொகையை திருப்பித்தர மறுப்பதாலும் தற்கொலை செய்து கொள்வதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனா்.

இதுகுறித்து கோட்டாட்சியா் விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com