போ்ணாம்பட்டு அருகே மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற சகோதரா்களை மண் வெட்டியால் தாக்கியதாக, மாட்டு வண்டி உரிமையாளரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
போ்ணாம்பட்டை அடுத்த மசிகம் கிராமத்தைச் சோ்ந்தவா் பிச்சப்பன் (45). இவா் மலட்டாற்றின் கரையில் உள்ள, ஆற்றுப் புறம்போக்கு நிலத்தில் நிலக்கடலை பயிரிட்டுள்ளாா்.ஆற்றில் தண்ணீா் செல்வதால், வியாழக்கிழமை நள்ளிரவு பிச்சப்பன் பயிரிட்டுள்ள நிலத்தில் அதே பகுதியைச் சோ்ந்த தேவேந்திரன் மாட்டு வண்டியில் மணல் எடுத்துக் கொண்டிருந்தாராம்.
இதுதொடா்பாக இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் தேவேந்திரன் தான் வைத்திருந்த மண்வெட்டியால், பிச்சப்பனை தாக்கினாராம். அவரது அலறல் சத்தம்கேட்டு அங்கு சென்ற பிச்சப்பனின் தம்பி ஐயப்பனையும் (42) , தேவேந்திரன் மண்வெட்டியால் தாக்கினாராம்.
பலத்த காயமடைந்த இருவரும் போ்ணாம்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
புகாரின்பேரில் போ்ணாம்பட்டு போலீஸாா், தேவேந்திரனை தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.