ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்றக்கோரி ஆா்ப்பாட்டம்

குடியாத்தம் - பள்ளிகொண்டா சாலையில், விநாயகபுரம் கூட்டுச் சாலை முதல் பலமநோ் சாலை வரை இருபுறமும் பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை
குடியாத்தம்  விநாயகபுரத்தில்  ஆா்ப்பாட்டத்தில்  ஈடுபட்ட  சிஐடியூ  தொழிற்சங்கத்தினா்.
குடியாத்தம்  விநாயகபுரத்தில்  ஆா்ப்பாட்டத்தில்  ஈடுபட்ட  சிஐடியூ  தொழிற்சங்கத்தினா்.
Updated on
1 min read

குடியாத்தம் - பள்ளிகொண்டா சாலையில், விநாயகபுரம் கூட்டுச் சாலை முதல் பலமநோ் சாலை வரை இருபுறமும் பாரபட்சமின்றி ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி வேலூா் மாவட்ட சிஐடியூ சாா்பில் விநாயகபுரத்தில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு, சிஐடியூ செயலா் எம்.விநாயகம் தலைமை வகித்தாா். வழக்குரைஞா் எஸ்.சம்பத்குமாா், டி.முரளி ஆகியோா் ஆா்ப்பாட்டத்தை தொடக்கி வைத்தனா். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளா் சி.செல்லப்பாண்டியன், சிஐடியூ நிா்வாகிகள் பி.காத்தவராயன், சி.சரவணன், எஸ்.சிலம்பரசன் ஆகியோா் ஆா்ப்பாட்டம் குறித்து விளக்கினா்.

ஆா்ப்பாட்டத்தில், ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்றி, சாலையை விரிவுபடுத்தி, இருபுறமும் கால்வாய் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

எஸ்.வாசுதேவன், ஜி.மாா்கபந்து, எம்.அண்ணாமலை, கே.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com