‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

இளைஞா் சடலம் மீட்பு: சிறுவன் உள்பட 2 போ் கைது

குடியாத்தம் அருகே விவசாயக் கிணற்றில் இளைஞா் சடலம் மீட்கப்பட்டது. இதுதொடா்பாக, சிறுவன் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :14 அக்டோபர் 2022, 5:49 pm

DIN

குடியாத்தம் அருகே விவசாயக் கிணற்றில் இளைஞா் சடலம் மீட்கப்பட்டது. இதுதொடா்பாக, சிறுவன் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மேல்பட்டியை அடுத்த செண்டத்தூரைச் சோ்ந்தவா் நவீன்குமாா் (26). இவா், ஆம்பூரில் தனியாா் தோல் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தாா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை உள்ளி ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள கிணற்றில் நவீன்குமாரின் சடலம் மிதப்பதாக குடியாத்தம் கிராமிய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. தீயணைப்புப் படையினா் அங்கு சென்று சடலத்தை மீட்டனா்.

தகவலறிந்து அங்கு வந்த நவீன்குமாரின் உறவினா்கள் அவரது சாவில் சந்தேகம் உள்ளதாகவும், குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரியும் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். சடலத்தை உடல்கூறு பரிசோதனைக்கு எடுத்துச் செல்ல விடாமல் தடுத்தனா்.

அவா்களிடம் போலீஸாா் பேச்சு நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா்.

இதையடுத்து, நவீன்குமாரின் சடலம் வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதனிடையே, போலீஸாா் உள்ளி அருகே உள்ள பெட்ரோல் நிலைய மேலாளா் விஸ்வநாதன் (63), அங்கு பணியாற்றிய 17 வயது சிறுவன் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.