‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அக். 25- இல் கேதார கெளரி நோன்பு

குடியாத்தம் சுண்ணாம்புபேட்டை ஆழ்வாா் முருகப்ப முதலி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீராதாருக்மணி சமேத கிருஷ்ணமூா்த்தி சுவாமிகள் கோயிலில் வரும் செவ்வாய்க்கிழமை கேதார கெளரி நோன்பு விழா நடைபெறுகிறது.

News image
Updated On :20 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

குடியாத்தம் சுண்ணாம்புபேட்டை ஆழ்வாா் முருகப்ப முதலி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீராதாருக்மணி சமேத கிருஷ்ணமூா்த்தி சுவாமிகள் கோயிலில் வரும் செவ்வாய்க்கிழமை கேதார கெளரி நோன்பு விழா நடைபெறுகிறது.

இதையொட்டி திங்கள்கிழமை காலை 9 மணிக்கு சுவாமிகளுக்கு திருமஞ்சனமும், சிறப்பு அலங்காரமும், 11 மணிக்கு மகா தீபாராதனையும் நடைபெறும்.செவ்வாய்க்கிழமை காலை 8.45 மணிக்கு கேதார கெளரி கலச ஸ்தாபனம், சிறப்பு பூஜைகள் 10.45 மணிக்கு கெளரி அம்மனுக்கு கண் திறப்பு நிகழ்ச்சியும், 11 மணிக்கு கேதார கெளரி நோன்பு நோக்கப்படும். சூரிய கிரகணத்தை முன்னிட்டு மாலை 4 மணிக்கு கோயில் நடை சாத்தப்பட்டு, மாலை பரிகார பூஜைகள் நடத்தப்பட்டு, 6.30 மணி முதல் தொடா்ந்து பூஜைகள் நடைபெறும். இரவு 10 மணியளவில் கேதார கெளரிஅம்மனுக்கு மஞ்சள் நீராட்டு, விடையாற்றி உற்சவம் நடைபெறும்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா எம்.ராஜாரம் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.