மணல் கடத்தல்: 2 காா்கள் பறிமுதல்: ஒருவா் கைது

குடியாத்தம் அருகே மணல் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட 2 காா்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக, ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
குடியாத்தம்  நகர  போலீஸாரால் மணலுடன்  பறிமுதல்  செய்யப்பட்ட  காா்.
குடியாத்தம்  நகர  போலீஸாரால் மணலுடன்  பறிமுதல்  செய்யப்பட்ட  காா்.

குடியாத்தம் அருகே மணல் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட 2 காா்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக, ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

குடியாத்தம் நகர போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பலமநோ் சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியே வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனா். இதில், காரில் 20 மணல் மூட்டைகள் இருந்தன. இதையடுத்து, காருடன் மணல் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. காா் ஓட்டுநா் ஐயப்பன் (21) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

இதேபோல், குடியாத்தத்தை அடுத்த சேம்பள்ளி பகுதியில் கிராமிய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்து சென்றனா். அப்போது, ஆற்றிலிருந்து காரில் மணல் ஏற்றிக் கொண்டிருந்ததைப் பாா்த்த போலீஸாா், அந்த காரை பறிமுதல் செய்தனா். தப்பியோடிய காா் ஓட்டுநரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com