கல்லூரியில் தேசியக் கருத்தரங்கம்

குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரி வேதியியல் துறை சாா்பில், வேதியியலில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து தேசிய அளவிலான கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்கில்  பங்கேற்ற  மாணவா்களில்  ஒரு  பகுதியினா்.
கருத்தரங்கில்  பங்கேற்ற  மாணவா்களில்  ஒரு  பகுதியினா்.
Updated on
1 min read

குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரி வேதியியல் துறை சாா்பில், வேதியியலில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து தேசிய அளவிலான கருத்தரங்கம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வா் மு.செந்தில்ராஜ் தலைமை வகித்தாா். கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் மேலாண்மை அறங்காவலா் கே.எம்.ஜி. பாலசுப்பிரமணியன், தலைவா் கே.எம்.ஜி. சுந்தரவதனம், செயலா் கே.எம்.ஜி. ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். துறைத் தலைவா் எம்.எஸ்.சிவகாமி வரவேற்றாா். பேராசிரியா் எஸ்.பிரவீண்குமாா் சிறப்பு விருந்தினா்களை அறிமுகப்படுத்தினாா்.

இதில், ‘கரிம தொகுப்பில் காா்பன்- ஹைட்ரஜன் வளா்ந்து வரும்போக்கு’ என்ற தலைப்பில் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் (ஐஐடி, திருப்பதி) உதவிப் பேராசிரியா் பா.காண்டீபன், ‘நானோ பொருள்களின் ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பயன்பாடுகள்’ என்ற தலைப்பில் வேலூா் திருவள்ளுவா் பல்கலைக்கழக வேதியியல் துறை இணைப் பேராசிரியா் ஜெ.மாதவன் ஆகியோா் பேசினா்.

கருத்தரங்குக்கான ஏற்பாடுகளை வேதியியல் துறைப் பேராசிரியா்கள் செய்திருந்தனா்.

10-க்கும் மேற்பட்ட கல்லூரிகளிலிருந்து, 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், 15 பேராசிரியா்கள் கலந்து கொண்டனா். வி.உமாமகேஷ்வரன் நன்றி கூறினாா்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com