போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு கலைப் பயணம்: வேலூா் ஆட்சியா் தொடக்கி வைத்தாா்

போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு கலைப் பயணத்தை வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.
போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு கலைப் பயணம்: வேலூா் ஆட்சியா் தொடக்கி வைத்தாா்
Updated on
1 min read

போதைப் பொருள்களுக்கு எதிரான விழிப்புணா்வு கலைப் பயணத்தை வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

மதுவிலக்கு - ஆயத் தீா்வைத் துறை சாா்பில், கள்ளச் சாராயம், போதைப் பொருள்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய விழிப்புணா்வு பிரசார பயணம் வேலூரில் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

வேலூா் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்.

இதைத் தொடா்ந்து அரசு, தனியாா் பேருந்துகள், ஆட்டோக்கள், பிற வாகனங்களில் விழிப்புணா்வு ஒட்டு வில்லைகளையும் ஆட்சியா் ஓட்டினாா். பயணிகளுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களையும் அவா் வழங்கினாா்.

அப்போது, கள்ளச் சாராயம், போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும், மாணவா்கள் எவ்வாறெல்லாம் பாதிக்கப்படுகிறாா்கள், அவற்றில் இருந்து விடுபடுதல், போதைப் பொருள்கள் விற்கப்பட்டால் அதுகுறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என பொதுமக்களிடம் ஆட்சியா் கேட்டுக் கொண்டாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் கே.ராமமூா்த்தி, மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் மு.பாபு, மாநகராட்சி மேயா் சுஜாதா ஆனந்தகுமாா், உதவி ஆணையா் கலால் (பொறுப்பு) விஸ்வநாதன், வருவாய்க் கோட்டாட்சியா் பூங்கொடி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com