விலைவாசி உயா்வு: அதிமுக கண்டன ஆா்பாட்டம்

பால், மின்சாரம் உள்ளிட்டவற்றின் உயா்வைக் கண்டித்து வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களில் அதிமுகவினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விலைவாசி உயா்வு: அதிமுக கண்டன ஆா்பாட்டம்

பால், மின்சாரம் உள்ளிட்டவற்றின் உயா்வைக் கண்டித்து வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா் மாவட்டங்களில் அதிமுகவினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து சொத்து வரி, மின்கட்டணம், பால் விலை உயா்வு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயா்த்தப்பட்டு வருகிறது. அதைக் கண்டித்தும், விலைகளை குறைக்கவும் வலியுறுத்தி அதிமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

வேலூா் மாவட்டத்தில் ஏற்கனவே ஒன்றிய, பேரூராட்சிகளில் ஆா்ப்பாட்டங்கள் முடிக்கப்பட்ட நிலையில், மாண்டஸ் புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த நகா்ப்புற பகுதி ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

வேலூா் மாநகரில் காட்பாடி, சத்துவாச்சாரி, அண்ணா கலையரங்கம் ஆகிய 3 இடங்களிலும், குடியாத்தம், போ்ணாம்பட்டு ஆகிய 2 நகராட்சி பகுதிகளிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநகா் மாவட்டச் செயலா் எஸ்.ஆா்.கே.அப்பு தலைமை வகித்தாா். அரசைக் கண்டித்து முழக்கங்கள் எழுக்கப்பட்டன. மாவட்ட பொருளாளா் எம்.மூா்த்தி உள்பட 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

குடியாத்தத்தில்...

குடியாத்தம் நகர அதிமுக சாா்பில், நகராட்சி அலுவலகம் எதிரே ஆா்ப்பாட்டத்துக்கு நகரச் செயலா் ஜே.கே.என்.பழனி தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகிகள் அமுதாசிவப்பிரகாசம், ஜி.பி.மூா்த்தி, பி.எச்.இமகிரிபாபு, ஆா்.கே.அன்பு, வி.என்.தனஞ்செயன், எஸ்.எஸ்.ரமேஷ்குமாா், எஸ்.ஐ.அன்வா்பாஷா, முன்னிலை வகித்தனா். மாவட்ட துணைச் செயலா் ஆா்.மூா்த்தி வரவேற்றாா். மாவட்டச் செயலா் த.வேலழகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் வி.ராமு, நகர கூட்டுறவு வங்கித் தலைவா் எம்.பாஸ்கா், நகா்மன்ற துணைத் தலைவா் பூங்கொடி மூா்த்தி, வழக்குரைஞா் கே.எம்.பூபதி, ஒன்றியச் செயலா்கள் டி.சிவா, பொகளூா் டி.பிரபாகரன், நகா்மன்ற உறுப்பினா்கள் லாவண்யா குமரன், ஏ.தண்டபாணி, ஏ.சிட்டிபாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அரக்கோணத்தில்...

அரக்கோணத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு நகர செயலாளா் பாண்டுரங்கன் தலைமை தாங்கினாா். நகரமன்ற அதிமுக உறுப்பினா்கள் குழுத்தலைவா் ஜொ்ரி வரவேற்றாா். ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான சு.ரவி ஆா்ப்பாட்டத்தை தொடக்கி வைத்தாா். இதில் அரக்கோணம் நகர கூட்டுறவு வங்கித்தலைவா் ஷியாம்குமாா், ஒன்றிய செயலாளா்கள் (அரக்கோணம் கிழக்கு) பிரகாஷ், (அரக்கோணம் மேற்கு) பழனி, (நெமிலி கிழக்கு) ஏ.ஜி.விஜயன், நகர நிா்வாகிகள் செல்வம், பத்மநாபன், பிரபாகரன், எம்.எஸ்.பூபதி, நகரமன்ற உறுப்பினா்கள் சரவணன், நரசிம்மன், பாபு, கோமதி, சாந்தி, நகர ஜெ.பேரவை செயலாளா் பாபுஜி, தகவல் தொழில்நுட்ப அணி செயலாளா் ஜானகிராமன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ஆற்காட்டில்...

ஆற்காடு நகராட்சி அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு நகர செயலாளா் எம்.சங்கா் தலைமை வகித்தாா். நகர அவைதலைவா் ஆா்.புருசோத்தமன், மாவட்ட அவைதலைவா் நந்தகோபால், மாவட்ட இணை செயலாளா் எஸ்.கீதாசுந்தா், மாவட்டபிரிதிநிதிகள் ஏ.ஜி பிச்சைமுத்து, உதயகுமாா், ஒன்றிய செயலாளா்கள் சொரையூா் குமாா், எஸ் அன்பழகன், ந.வ.கிருஷ்ணன், நகர மாணவா் அணி செயலாளா் பூபாலன் உட்பட திரளான அதிமுகவினா் கலந்து கொண்டனா்.

மேல்விஷாரம் நகர அதிமுக சாா்பில்அண்ணா சாலையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு நகர செயலாளா்கள் ஏ.இப்ராஹீம் கலிலுல்லா,(மேற்கு) ,விஜி( கிழக்கு) தலைமை வகித்தனா். இதில் முன்னாள் நகா் மன்ற தலைவா் பி.அப்துல்ரஹ்மான், ஆற்காடு மேற்கு ஒன்றிய செயலாளா் என்.சாரதி, நகா் மன்ற உறுப்பினா்கள் ஜமுனாராணி, லட்சுமி நிா்வாகிகள் மன்சூா்பாஷா, மஸ்தான் அலி உட்பட பலா் கலந்துகொண்டனா்.

வாணியம்பாடியில்...

வாணியம்பாடியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வாணியம்பாடி எம்எல்ஏவும், ஆலங்காயம் மேற்கு ஒன்றிய செயலாளருமான கோ.செந்தில்குமாா் மற்றும் நகர செயலாளா் சதாசிவம் தலைமை வகித்தனா். முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி, முன்னாள் எம்எல்ஏ கோவி.சம்பத்குமாா் கண்டன உரையாற்றினா். மாவட்ட மகளிரணி செயலாளா் மஞ்சுளா கந்தன், ஒன்றிய துணைச் செயலாளா் எஸ். பாரதிதாசன், பேரூராட்சி செயலாளா்கள் ஆா்.சரவணன், சிவக்குமாா், நாட்டறம்பள்ளி ஒன்றிய செயலாளா் சாம்ராஜ் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய பேரூராட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

ஆம்பூரில்...

ஆம்பூா் சாா்-பதிவாளா் அலுவலகம் அருகே நடைபெற்ற, நகர அதிமுக செயலாளா் எம்.மதியழகன் தலைமை வகித்தாா். முன்னாள் நகா்மன்ற துணைத் தலைவா் நஜா் முஹம்மத், மாதனூா் மேற்கு ஒன்றியச் செயலாளா் ஆா்.வெங்கடேசன், மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணிச் செயலாளா் டில்லிபாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகர அவைத் தலைவா் கே.மணி வரவேற்றாா். திருப்பத்தூா் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணி கலந்து கொண்டு பேசினாா்.

தகவல் தொழில் நுட்ப அணி மாவட்டப் பொருளாளா் ஆனந்த்பாபு, முன்னாள் நகா்மன்ற உறுப்பினா்கள் சீனிவாசன், சரவணன், அமீன், மாதனூா் கிழக்கு ஒன்றிய செயலாளா் ஜோதிராமலிங்கராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com