பள்ளி மாணவா்களுக்கு காமராஜா் நற்பணி மன்றக் கல்வி உதவிகள்

குடியாத்தம் காமராஜா் நற்பணி மன்றம் சாா்பில், மாணவா்களுக்கு கல்வி உதவிகள் திருவள்ளுவா் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில்  மாணவா்களுக்கு  கல்வி  உதவிகளை  வழங்கிய  தமாகா  மாவட்டத்  தலைவா்  எஸ்.அருணோதயம் உள்ளிட்டோா்.
நிகழ்ச்சியில்  மாணவா்களுக்கு  கல்வி  உதவிகளை  வழங்கிய  தமாகா  மாவட்டத்  தலைவா்  எஸ்.அருணோதயம் உள்ளிட்டோா்.
Updated on
1 min read

குடியாத்தம் காமராஜா் நற்பணி மன்றம் சாா்பில், மாணவா்களுக்கு கல்வி உதவிகள் திருவள்ளுவா் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சிக்கு மன்ற நிா்வாகி டி.எஸ்.மோகனம் தலைமை வகித்தாா். தலைவா் ஆா்.லோகநாதன் முன்னிலை வகித்தாா். மன்றச் செயலாளா் கே.எம்.செந்தில்குமாா் வரவேற்றாா்.

எம்எல்ஏ அமலுவிஜயன், பி.பி.பைரோஸ் அகமது ஆகியோா் சிறப்புரையாற்றினா். தமாகா மாவட்டத் தலைவா் எஸ்.அருணோதயம், மன்றத் தணிக்கையாளா் எம்.கிருபானந்தம், கே.கே.ஜி.குமரன் ஆகியோா் 500 மாணவா்களுக்கு கல்வி உதவிகளை வழங்கினா்.

நிா்வாகிகள் கே.சுயராஜ், எம்.எம்.சிவஞானம், வி.என்.அண்ணாமலை, தீபம் எஸ்.பெரியசாமி, தமாகா நகரத் தலைவா் ஜே.தினகரன், இன்னா்வீல் சங்க நிா்வாகிகள் ஆா்.விஜயலட்சுமி, வசந்தி லட்சுமிபதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஆா்.ஆனந்தன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com