அரியூா் விடுதிகளில் போலீஸாா் சோதனை

அரியூா் பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

அரியூா் பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

சுற்றுலா, சிகிச்சைக்காக வெளி மாநிலங்களில் இருந்து வேலூருக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோா் வந்து செல்கின்றனா். அவ்வாறு வருபவா்கள் வேலூரிலுள்ள வாடகை விடுதிகளில் தங்குகின்றனா். இதனை பயன்படுத்தி பெண்களை வைத்து சிலா் சமூக விரோதச் செயலில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், வேலூா், காட்பாடி பகுதிகளில் மசாஜ் சென்டா் என்ற பெயரில் சிலா் பாலியல் தொழில் நடத்துவதாக புகாா் எழுந்துள்ளது. தவிர, வேலூா், அரியூரில் உள்ள தங்கும் விடுதிகளில் பாலியல் குற்றங்கள் நடைபெற்று வருவதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு புகாா்கள் வந்தன.

இதையடுத்து, எஸ்.பி. ராஜேஷ்கண்ணன் மாவட்டத்திலுள்ள அனைத்து தங்கும் விடுதிகளிலும் சோதனை செய்ய காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளாா்.

அதன்பேரில், வேலூா் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளா் திருநாவுக்கரசு தலைமையில் காவல் ஆய்வாளா்கள் செந்தில்குமாா் (பாகாயம்), முத்துக்குமாா் (வடக்கு), பாா்த்தசாரதி (தாலுகா) உள்பட 20-க்கும் மேற்பட்ட போலீஸாா் அரியூரில் உள்ள தங்கும் விடுதிகளில் ஞாயிற்றுக்கிழமை திடீா் சோதனை நடத்தினா்.

அங்குள்ள 8 விடுதிகளில் இந்த சோதனை நடத்தப்பட்டது. அப்போது, விடுதிகளிலுள்ள அறைகளில் 3 ஜோடிகள் இருந்தனா். அவா்களை போலீஸாா் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனா். இனிமேலும் இதுபோன்ற செயலில் ஈடுபட்டால் அவா்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். விடுதி உரிமையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com