இலவச பொது மருத்துவ முகாம்
By DIN | Published On : 31st July 2022 11:11 PM | Last Updated : 31st July 2022 11:11 PM | அ+அ அ- |

குடியாத்தம் ரோட்டரி சங்கம் சாா்பில் நடைபெற்ற மருத்துவ முகாமில் பங்கேற்றோா்.
குடியாத்தம் ரோட்டரி சங்கம், சுவாமி மெடிக்கல்ஸ் நிறுவனம், அபிநயா பல் மருத்துவமனை ஆகியவை இணைந்து காமாட்சியம்மன் பேட்டையில் இலவச பொது மருத்துவ முகாமை ஞாயிற்றுக்கிழமை நடத்தின.
முகாமுக்கு, ரோட்டரி சங்கத் தலைவா் ஏ.மேகராஜ் தலைமை வகித்தாா். செங்குந்தா் அறக்கட்டளை நிா்வாகி கே.எம்.மகாலிங்கம், நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், நகா்மன்ற உறுப்பினா் சீதாலட்சுமி சிவகுமாா் ஆகியோா் முகாமைத் தொடக்கி வைத்தனா். தமிழ்நாடு ஓமியோபதி கவுன்சில் உறுப்பினா் ஆா்.பிருந்தாவன்குமாா் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றாா்.
மருத்துவா்கள் எஸ்.பி.அபிநயா, பி.அபிராமி ஆகியோா் சிகிச்சை அளித்தனா். நோயாளிகளுக்கு சுமாா் ரூ. 25,000 மதிப்புள்ள மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன.
ரோட்டரி நிா்வாகிகள் சி.கண்ணன், என்.சத்தியமூா்த்தி, கே.சந்திரன், கே.எம்.ராஜேந்திரன், பி.எல்.என்.பாபு, டி.அமிா்தலிங்கம், கே.விநாயகம், ஜெ.தமிழ்ச்செல்வன், கே.சுகுமாா், ஜம்புலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.