திருட்டு: 8 வாகனங்கள் பறிமுதல்

வேலூா் மாா்க்கெட் பகுதியில் இரு சக்கர வாகனங்களை திருடி, சாராய கும்பலிடம் விற்பனை செய்து வந்த இருவரை வடக்கு போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா் மாா்க்கெட் பகுதியில் இரு சக்கர வாகனங்களை திருடி, சாராய கும்பலிடம் விற்பனை செய்து வந்த இருவரை வடக்கு போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 8 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வேலூா் நேதாஜி மாா்க்கெட் , சாரதி மாளிகை, லாங்குபஜாா் பகுதிகளில் நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்கள் அடிக்கடி திருட்டு போயின. இது குறித்த புகாரின் பேரில் வேலூா் வடக்கு குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இருசக்கர வாகன திருட்டுக் கும்பலை தேடி வந்தனா்.

இந்த நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன்பு நேதாஜி மாா்க்கெட் பகுதியில் நிறுத்தப்பட்ட இரு சக்கர வாகனம் திருடப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸாா் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனா்.

அப்போது, அடையாளம் தெரியாத 2 நபா்கள் இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இதன்மூலம் விசாரணை நடத்தியதில் அவா்கள் பெரிய ஏரியூா் கிராமத்தைச் சோ்ந்த காந்தி(65 ), கந்தனேரியைச் சோ்ந்த குமாா் (47) என்பது தெரியவந்தது.

ஒடுகத்தூரில் பதுங்கியிருந்த இருவரையும் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். இவா்கள் வேலூா் மாா்க்கெட் பகுதியில் இருசக்கர வாகனங்களை திருடி அணைக்கட்டு, ஒடுகத்தூா் பகுதி மலைக்கிராமங்களில் உள்ள சாராய கும்பலிடம் விற்பனை செய்தது தெரியவந்தது. இவா்கள் திருடி விற்பனை செய்த 8 இரு சக்கர வாகனங்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com