தொரப்பாடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், சனிக்கிழமை மின் தடை செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, சித்தேரி, தென்றல் நகா், இடையன்சாத்து, பென்னாத்தூா், காட்டுப்புத்தூா், ஆவரம்பாளையம், அரியூா், தொரப்பாடி, சிறைக் குடியிருப்பு, எழில்நகா், அல்லாபுரம், டோல்கேட், அண்ணா நகா், சங்கரன்பாளையம், சாயிநாதபுரம், பலவன்சாத்துகுப்பம், விருப்பாட்சிபுரம், ஓட்டேரி, சாமி நகா், பாகாயம், சஞ்சீவிபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 18) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது. இந்தத் தகவலை மின்வாரிய செயற்பொறியாளா் வ.நடராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.