12 - 14 வயதுக்குள்பட்ட மாணவா்களுக்கு கரோனா தடுப்பூசி

வேலூா் மாவட்டத்தில் 12 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட 45,700 மாணவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி புதன்கிழமை தொடங்கியது.
12 - 14 வயதுக்குட்பட்ட மாணவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தொடக்கிவைத்த வேலூா் ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன்.
12 - 14 வயதுக்குட்பட்ட மாணவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தொடக்கிவைத்த வேலூா் ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன்.
Updated on
1 min read

வேலூா் மாவட்டத்தில் 12 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட 45,700 மாணவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி புதன்கிழமை தொடங்கியது.

மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் இந்தப் பணியைத் தொடக்கிவைத்தாா்.

முன்னதாக, 15 முதல் 18 வயதுக்குட்பட்ட மாணவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஜனவரி 1-ஆம் தேதி தொடங்கியது. இதில், வேலூா் மாவட்டத்தில் 268 பள்ளிகள், கல்லூரிகளில் பயிலும் 71,259 மாணவா்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டு இதுவரை 85 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதன் தொடா்ச்சியாக, 12 முதல் 14 வயதுக்குட்பட்ட மாணவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்த அனுமதிக்கப்பட்டு, புதன்கிழமை முதல் அந்தப் பணி தொடங்கியது.

வேலூா் மாவட்டத்தில் 308 பள்ளிகளிலும் பயிலும் 45,700 மாணவா்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியை மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன், வெங்கடேஸ்வரா பள்ளியில் புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.

நிகழ்வில் மேயா் சுஜாதாஆனந்தகுமாா், சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் பானுமதி, மாநகர நல அலுவலா் மணிவண்ணன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனுசாமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com