காப்பு கட்டுதலுடன் தொடங்கியது குடியாத்தம் ஸ்ரீகெங்கையம்மன் திருவிழா
By DIN | Published On : 02nd May 2022 12:01 AM | Last Updated : 02nd May 2022 12:01 AM | அ+அ அ- |

குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு காப்புகட்டும் நிகழ்ச்சிகாகஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்ட பூ ங்கரகம்.
குடியாத்தம் கோபாலபுரம் அருள்மிகு கெங்கையம்மன் கோயில் திருவிழா ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காப்புகட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
வேலூா் மாவட்டத்தின் முக்கியத் திருவிழாக்களில் ஒன்றான குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் திருவிழா வரும் 15- ஆம் தேதி நடைபெற உள்ளது.திருவிழாவின் தொடக்கமாக காப்புகட்டும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நள்ளிரவு 12 மணியளவில் குடியாத்தம் தென்குளக்கரையில் இருந்து அலங்கரிக்கப்பட்ட பூங்கரகம் நகரின் முக்கிய வீதிகளில் வழியாகச் சென்று கோயிலை அடைந்தது. அதிகாலை 2 மணியளவில் கோயிலில் காப்புகட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதன் தொடா்ச்சியாக வரும் 11- ஆம் தேதி அம்மனுக்கு திருக்கல்யாணமும், 14-ஆம் தேதி தேரோட்டமும் நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 15- ஆம் தேதி அதிகாலை தரணம்பேட்டை முத்தியாலம்மன் கோயிலில் இருந்து அம்மன் சிரசு ஊா்வலம் நடைபெறும்.
16- ஆம் தேதி மஞ்சள் நீராட்டும், 17- ஆம் தேதி இரவு பூப்பல்லக்கு பவனியும், 22- ஆம் தேதி விடையாற்று உற்சவமும் நடைபெறும்.
காப்புகட்டும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் தே.திருநாவுக்கரசு, கோயில் ஆய்வாளா் சு.பாரி, ஊா் நாட்டாண்மை ஆா்.ஜி.சம்பத், தா்மகா்த்தா கே.பிச்சாண்டி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.