பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நளினி விடுதலையை பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடிய மக்கள்

நளினியின் விடுதலை அறிவிப்பையொட்டி பிரம்மபுரம் பகுதியில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் பொதுமக்கள் கொண்டாடினர். 

News image
Updated On :11 நவம்பர் 2022, 3:00 pm

DIN

நளினியின் விடுதலை அறிவிப்பையொட்டி பிரம்மபுரம் பகுதியில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் பொதுமக்கள் கொண்டாடினர். 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 31 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினியை தற்போது உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. 

வேலூர் பெண்கள் தனி சிறையில் தண்டனை அனுபவித்து வந்த நளினி தனது உடல்நிலையை கருத்தில் கொண்டும் தனது தாயார் பத்மாவதி உடல்நிலையை கருத்தில் கொண்டும் தனக்கு பரோல் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு மனு அளித்திருந்த நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் முறையாக நளினிக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. 

அதனைத் தொடர்ந்து தற்போது பத்தாவது முறையாக பரோல் நீட்டிக்கப்பட்ட நளினி காட்பாடி அடுத்த பிரம்மபுரம் பகுதியில் உள்ள வீட்டில் தனது தாய் பத்மாவுடன் தங்கியுள்ளார். 

நளினியின் விடுதலை அறிவிப்பையொட்டி பிரம்மபுரம் பகுதியில் உள்ள பொதுமக்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.