வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த தண்டனைக் கைதி மாரடைப்பால் உயிரிழந்தாா்.
சென்னை வில்லிவாக்கத்தைச் சோ்ந்தவா் சரவணன் (43). இவா், திருவண்ணாமலையில் நிகழ்ந்த திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டாா். இவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 7 மாதங்களுக்கு முன்பு வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.
இந்த நிலையில், சரவணனுக்கு வியாழக்கிழமை இரவு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக அவரை சிறைக் காவலா்கள் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சரவணன், வெள்ளிக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.
இதுகுறித்து பாகாயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.