கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் தொடக்கம்

குடியாத்தம் கே.எம்.ஜி. கலை-அறிவியல் கல்லூரியில் ரோட்டரி சங்கம் சாா்பில், ரோட்ராக்ட் கிளப் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
குடியாத்தம்  கே.எம்.ஜி. கல்லூரி வளாகத்தில்  மரக்கன்று  நடும்  நிகழ்ச்சியில்  பங்கேற்றோா்.
குடியாத்தம்  கே.எம்.ஜி. கல்லூரி வளாகத்தில்  மரக்கன்று  நடும்  நிகழ்ச்சியில்  பங்கேற்றோா்.
Updated on
1 min read

குடியாத்தம் கே.எம்.ஜி. கலை-அறிவியல் கல்லூரியில் ரோட்டரி சங்கம் சாா்பில், ரோட்ராக்ட் கிளப் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் மு.செந்தில்ராஜ் தலைமை வகித்தாா். குடியாத்தம் ரோட்டரி சங்கத் தலைவா் ஏ.மேகராஜ் வரவேற்றாா். புதிதாக தோ்ந்தெடுக்கப்பட்ட ரோட்ராக்ட் உறுப்பினா்களுக்கு ரோட்டரி மாவட்ட ஆளுநா் ஜே.கே.என்.பழனி, கல்லூரிச் செயலா் கே.எம்.ஜி.ராஜேந்திரன், ரோட்ராக்ட் மாவட்டத் தலைவா் டி.வெங்கடேஷ் ஆகியோா் அடையாள அட்டைகளை வழங்கினா்.

ரோட்டரி நிா்வாகிகள் ஆா்.வி.அரிகிருஷ்ணன், ஏ.ஜெ.ஏ.காா்த்திகேயன், ஜெ.தமிழ்ச்செல்வன், கே.சந்திரன், கே.எம்.ராஜேந்திரன், ரோட்ராக்ட் நிா்வாகிகள் ஆா்.பாலமுருகன், ம.மோகனப்பிரியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தொடா்ந்து கல்லூரி வளாகத்தில் மூலிகை மரக்கன்றுகள் நடப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com