விநாயகா் சதுா்த்தியையொட்டி, குடியாத்தம் காமாட்சியம்மன் பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீவலம்புரி விநாயகா் கோயிலில் செங்குந்த மரபினா் சாா்பில், 501 கிலோ லட்டால் ஸ்ரீவிநாயகா், மகாலட்சுமி அம்மன் உருவம் செய்யப்பட்டு படையலிடப்பட்டது.
இதையொட்டி, அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. லட்டு விநாயகரை ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.