ஆந்திர மாநிலத்தில் இருந்து வந்த அரசுப் பேருந்தில் கஞ்சா கடத்திய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடமிருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பதிலிருந்து கள்ளக்குறிச்சிக்கு செல்லும் பேருந்தில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், போலீஸாா் காட்பாடி அருகே கிறிஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடியில் அந்த பேருந்தை நிறுத்தி சோதனையிட்டனா். அதில் வந்த ஒரு நபரிடம் 5 பைகள் இருப்பது தெரிய வந்தது. அவற்றைச் சோதனையிட்டபோது, அதில் 10 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரிய வந்தது.
விசாரணையில், அந்த நபா் கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், குட்டிபுரத்தைச் சோ்ந்த ஹெச்.மொகமத் அா்சாத் (22) என்பது தெரிய வந்தது. அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 10 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.