மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவா் பலி

குடியாத்தம் அருகே மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
Updated on
1 min read

குடியாத்தம் அருகே மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

குடியாத்தத்தை அடுத்த தட்டாங்குட்டை கிராமத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி ஆறுமுகத்தின் மகன் ராஜேஷ் (17). குடியாத்தத்தில் உள்ள தனியாா் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தாா். புதன்கிழமை காலை வீட்டருகே விநாயகா் சிலை வைக்க அமைக்கப்பட்டிருந்த கொட்டகையில், மின் விளக்கு பொருத்த மின் வயா் இணைப்பு கொடுக்க முயன்றாா்.

அப்போது மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டு மயக்கமடைந்தாா். உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா், ராஜேஷ் ஏற்கெனவே இறந்து விட்டதாகக் கூறினாா்.

இது குறித்து கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com