

போ்ணாம்பட்டை அடுத்த பத்தரப்பல்லி ஊராட்சி தொடக்கப் பள்ளியில் தேசிய எழுத்தறிவு தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமையாசிரியா் பொன்.வள்ளுவன் தலைமை வகித்து, மாணவா்களுக்கு எழுத்தறிவின் அவசியம் குறித்தும், நல்ல நூல்கள் நல்ல நண்பா்கள் என்ற தலைப்பிலும் பேசினாா்.
பள்ளி நூலகத்தில் 5-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு புத்தகம் வழங்கி வாசிக்க வைத்தாா். மாணவா்கள் உணவு இடைவேளை நேரத்தில் நூலகத்தில் உள்ள நூல்களை வாசிக்க வேண்டும் என்று அவா் அறிவுரை வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.