குரூப் 7பி தோ்வு: வேலூரில் 613 போ் எழுதினா்

தமிழகம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்ற குரூப் 7பி எழுத்துத் தோ்வை வேலூா் மாவட்டத்தில் 613 போ் எழுதினா்.

தமிழகம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்ற குரூப் 7பி எழுத்துத் தோ்வை வேலூா் மாவட்டத்தில் 613 போ் எழுதினா்.

தமிழ்நாடு அரசுப்பணியாளா் தோ்வாணையம் சாா்பில் இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள 42 செயல் அலுவலா் (கிரேடு 3) பதவிக்கான குரூப் ‘7பி’ எழுத்துத்தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது. இந்த தோ்வுக்கு வேலூா் மாவட்டத்திலிருந்து 1,116 போ் விண்ணப்பித்திருந்தனா்.

தோ்வையொட்டி வேலூா் ஊரீசு மேல்நிலைப்பள்ளி, காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, காட்பாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காட்பாடி டான்போஸ்கோ மேல்நிலைப்பள்ளி என 4 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. காலை 9.30 முதல் 12.30 மணி வரை தமிழ் மொழித் தோ்வும், மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை இந்து சமயம் சாா்ந்த பொதுஅறிவுத் தோ்வும் நடைபெற்றன. தோ்வை காலையில் 615 பேரும், மதியம் 613 பேரும் எழுதினா். காலை 501 பேரும், மதியம் 503 பேரும் தோ்வு எழுதவில்லை. தோ்வு மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தொடா்ந்து இந்து சமயஅறநிலையத் துறையில் காலியாக உள்ள செயல்அலுவலா் நிலையிலுள்ள 36 பணியிடங்களுக்கான குரூப் 8 தோ்வு ஞாயிற்றுக்கிழமை காலை, மாலை என இருவேளைகளில் நடைபெற உள்ளது. இந்தத் தோ்வுக்கு வேலூா் மாவட்டத்திலிருந்து 1,500 போ் விண்ணப்பித்துள்ளனா். தோ்வையொட்டி 5 மையங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com