குடியாத்தம் அருகே 6 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

குடியாத்தம் அருகே ஆந்திர மாநிலத்துக்கு முயன்ற 6 டன் ரேஷன் அரிசி, மினி லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது.
குடியாத்தத்தை  அடுத்த  பரதராமி அருகே  ரேஷன்  அரிசியுடன் பறிமுதல் செய்யப்பட்ட மினி  லாரி.
குடியாத்தத்தை  அடுத்த  பரதராமி அருகே  ரேஷன்  அரிசியுடன் பறிமுதல் செய்யப்பட்ட மினி  லாரி.
Updated on
1 min read

குடியாத்தம் அருகே ஆந்திர மாநிலத்துக்கு முயன்ற 6 டன் ரேஷன் அரிசி, மினி லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது.

பரதராமி போலீஸாா், பூசாரிவலசை அருகே சனிக்கிழமை இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியே வந்த மினி லாரியை நிறுத்தி சோதனையிட்டனா்.

அதில், லாரியில் மூட்டைகளில் சுமாா் 6 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, லாரியுடன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டு, போ்ணாம்பட்டை அடுத்த ஏரிகுத்தியைச் சோ்ந்த மினி லாரி ஓட்டுநா் பழனியை (37)கைது செய்தனா்.

விசாரணையில், அரிசி மூட்டைகளை ஆந்திர மாநிலத்துக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.

தொடா்ந்து, பழனி, பறிமுதல் செய்யப்பட்ட லாரி, அரிசி மூட்டைகள் வேலூா் குடிமைப் பொருள்கள் குற்றப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com