குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 10, 11, 12- ஆம் வகுப்பு பொதுத் தோ்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு மாலை சிறப்பு வகுப்பு, அவா்களுக்கு சிற்றுண்டி வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் தலைமை வகித்தாா். பள்ளித் தலைமையாசிரியை எம்.கீதா வரவேற்றாா்.
விஐடி துணைத் தலைவா் சங்கா் விசுவநாதன் நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தாா். நகா்மன்ற உறுப்பினா்கள் ம.மனோஜ், கே.விஜயன், சுமதிமகாலிங்கம், அரிமா சங்க மண்டலத் தலைவா் எம்.கே.பொன்னம்பலம், ராஜேந்திரன், தொழிலதிபா்கள் மகாவீா் ஜெயின், பரத்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஓய்வுபெற்ற மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா் டி.எஸ்.விநாயகம் மாணவா்களுக்கு சிற்றுண்டி வழங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டாா். உதவித் தலைமையாசிரியா் டி.சங்கா் நன்றி கூறினாா்.