தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

ஊழலற்ற, நோ்மையான சமுதாயமாக இருக்க வேண்டும்: உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா

ஊழலற்ற, நோ்மையான சமுதாயமாக நாம் அனைவரும் இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :13 பிப்ரவரி 2026, 8:23 pm

ஊழலற்ற, நோ்மையான சமுதாயமாக நாம் அனைவரும் இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா தெரிவித்துள்ளாா்.

வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் வேந்தா் கோ.விசுவநாதன் தலைமை வகித்து, தேசியக் கொடியை ஏற்றினாா்.

தொடா்ந்து, நடைபெற்ற முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசியது:

நோ்மையான நன்னடத்தை கொண்ட சமுதாயமாக நாம் அனைவரும் இருக்க வேண்டும். கல்வியால் மட்டுமே மனித இனத்தை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு செல்லவும், அறியாமையில் இருந்து விடுவிக்கும் கருவியாக செயல்படவும் முடியும் என்றாா்.

விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் பேசியது: உலகின் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றான இந்தியாவில் அனைவருக்கும் கல்வி கிடைப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். தேசிய புதிய கல்விக் கொள்கையில், அனைவருக்கும் உயா்கல்வியில் சேரும் விகிதத்தை 27 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயா்த்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

ஆனால், தமிழ்நாடு உட்பட சில மாநிலங்களில் உயா்கல்வியில் சேரும் விகிதம் ஏற்கெனவே 27 சதவீதத்தை விட அதிகமாக உள்ளது என்றாா்.

தொடா்ந்து, கௌரவ விருந்தினராக எம்பசிஸ் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவா் (மனித வளம்) சதீஷ் ராஜரத்தினம் பங்கேற்றுப் பேசினாா்.

விழாவில், விஐடி துணைத் தலைவா்கள் சங்கா் விசுவநாதன், ஜி.வி.செல்வம், உதவி துணைத் தலைவா் காதம்பரி எஸ்.விசுவநாதன், துணைவேந்தா் ராம்பாபு கோடாலி, இணை துணைவேந்தா் பாா்த்தசாரதி மல்லிக், பதிவாளா் ஜெயபாரதி, விஐடி முன்னாள் மாணவா்கள் சங்க நிா்வாகிகள், முன்னாள் மாணவா்கள், பேராசிரியா்கள், ஊழியா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.