மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

வேலூரில் 10 பேருக்கு ரூ.34.94 லட்சத்தில் நலத் திட்ட உதவி

குடியரசு தினத்தையொட்டி வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தேசியக் கொடியேற்றி வைத்து 10 பேருக்கு ரூ.34 லட்சத்து 94 ஆயிரத்து 805 நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

News image

குடியரசு தின விழாவில் பயனாளிக்கு நலத் திட்ட உதவி வழங்கிய வேலூா் ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன். உடன் மாவட்ட எஸ்.பி. ராஜேஷ்கண்ணன் உள்ளிட்டோா்.

Updated On :13 பிப்ரவரி 2026, 10:50 pm

குடியரசு தினத்தையொட்டி வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தேசியக் கொடியேற்றி வைத்து 10 பேருக்கு ரூ.34 லட்சத்து 94 ஆயிரத்து 805 நலத் திட்ட உதவிகளை வழங்கினாா்.

நாட்டின் 74-ஆவது குடியரசு தின விழா வேலூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில், வேலூா் கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்றது. அங்குள்ள காந்தி சிலைக்கு ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன், கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றி வைத்தாா்.

பின்னா், நேதாஜி விளையாட்டரங்கில் நடைபெற்ற விழாவிலும் தேசிய கொடி ஏற்றி வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணன் தலைமையிலான போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா்.

மேலும், சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வாரிசுகளுக்கு ஆட்சியா் சால்வை அணிவித்து கௌரவித்தாா். சிறப்பாகப் பணியாற்றிய காவல் துறையினா் 46 பேருக்கு முதல்வரின் காவலா் நற்பணி பதக்கமும், பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினாா். அரசுப் பணிகளில் சிறப்பாகப் பணியாற்றிய 271 ஊழியா்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

தொடா்ந்து, பல்வேறு அரசுத் துறைகள் சாா்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.34.94 லட்சத்தில் நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

மேலும், விபத்தில் சிக்கிய குழந்தையை விரைந்து செயல்பட்டு மருத்துவமனையில் சோ்த்த சென்னையைச் சோ்ந்த கீதா என்ற பெண்ணுக்கு குட் சமாரிடன் என்ற நற்சான்றிதழும், சிறந்த சமூக சேவை புரிந்த மூவருக்கு நற்பணி சான்றிதழும் வழங்கப்பட்டன. பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவில், வேலூா் சரக டிஐஜி எம்.எஸ்.முத்துசாமி, அணைக்கட்டு எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமாா், மாவட்ட வருவாய் அலுவலா் கே.ராமமூா்த்தி, மாநகராட்சி மேயா் சுஜாதா ஆனந்தகுமாா், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.