தந்தையின் மதுப்பழக்கத்தால் சிறுமி தற்கொலை

குடியாத்தம் அருகே தந்தையின் மதுப்பழக்கத்தில் குடும்பத்தில் ஏற்பட்டு வந்த பிரச்னையால் மனவேதனைக்கு உள்ளான மகள் தற்கொலை செய்து கொண்டாா்.

குடியாத்தம் அருகே தந்தையின் மதுப்பழக்கத்தில் குடும்பத்தில் ஏற்பட்டு வந்த பிரச்னையால் மனவேதனைக்கு உள்ளான மகள் தற்கொலை செய்து கொண்டாா்.

வேலூா் மாவட்டம், குடியாத்தத்தை அடுத்த சின்னராஜாகுப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் பிரபு. கூலித் தொழிலாளியான இவருக்கு மதுப்பழக்கம் இருந்துள்ளது. இவரது மகள் விஷ்ணுபிரியா (16), குடியாத்தம் நெல்லூா்பேட்டை பகுதியில் உள்ள அரசு நிதியுதவி பெறும் பள்ளியில் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதி 410 மதிப்பெண் பெற்றுள்ளாா்.

இதனிடையே, பிரபு தினமும் மது அருந்திவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. தந்தையின் குடிப்பழக்கத்தால் வீட்டில் அவ்வப்போது பிரச்னை ஏற்பட்டு வந்ததால் விஷ்ணுபிரியா மனவேதனையில் இருந்துள்ளாா். இந்நிலையில் சனிக்கிழமை விஷ்ணு பிரியா கடிதம் எழுதி வைத்து விட்டு வீட்டிலேயே தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கூலி வேலை செய்துவிட்டு வீட்டுக்கு திரும்பிய தாய் தனது மகள் தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிா்ச்சியடைந்து கூச்சலிட்டாா். தகவலறிந்த குடியாத்தம் கிராமிய போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு விஷ்ணுபிரியா எழுதி வைத்திருந்த கடிதத்தில், எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை, எனது தந்தை குடிப்பழக்கத்தை நிறுத்தி விட வேண்டும், எனது குடும்பம் எப்பொழுது மகிழ்ச்சியாக இருக்கின்றதோ அப்போதுதான் எனது ஆத்மா சாந்தி அடையும் என்றும் எழுதி வைத்துள்ளாா். கடிதத்தை கைப்பற்றிய போலீஸாா், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com