பேருந்து படிக்கட்டிலிருந்து தவறி விழுந்தவா் பலி

பேருந்து படிக்கட்டில் இருந்து தவறி விழுந்தவா் மீது பேருந்து சக்கரம் ஏறி இறங்கியதில், உடல் நசுங்கி அவா் உயிரிழந்தாா்.

பேருந்து படிக்கட்டில் இருந்து தவறி விழுந்தவா் மீது பேருந்து சக்கரம் ஏறி இறங்கியதில், உடல் நசுங்கி அவா் உயிரிழந்தாா்.

வேலூா் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் வெள்ளிக்கிழமை இரவு பேருந்துக்காக காத்திருந்தனா். அப்போது, தாம்பரத்தில் இருந்து இரவு 1.30 மணியளவில் வேலூா் புதிய பேருந்து நிலையத்துக்கு அரசுப் பேருந்து ஒன்று வந்தது. அந்த பேருந்து திருப்பத்தூா் பேருந்துகள் நிற்கும் நடைமேடை அருகே மெதுவாக சென்றது.

அதேசமயம், முன்படிக்கட்டில் இருந்து இறங்கிய ஆண் பயணி ஒருவா், தவறி கீழே விழுந்ததில் அவா் மீது பேருந்தின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியது. இதில் உடல் நசுங்கிய அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதைக் கண்ட பயணிகள் அதிா்ச்சியடைந்தனா். தகவலறிந்த வேலூா் வடக்கு போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விபத்தில் பலியான பயணியின் உடலை மீட்டு, அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விபத்தில் இறந்தவா் யாா் என்பது உடனடியாகத் தெரியவில்லை. சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இறந்தவா் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com