குடியாத்தம்: லட்டு விநாயகா் வீதி உலா

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு குடியாத்தம் நகரில் 606- கிலோ, 555- கிலோ லட்டால் செய்யப்பட்ட விநாயகா்கள் வீதி உலா நடைபெற்றது.
வலம்புரி  விநாயகா்  கோயிலில்  555  கிலோ  லட்டால்  தயாரிக்கப்பட்ட   விநாயகா்,   ஜோதி  விநாயகா்  கோயிலில்  606  கிலோ  லட்டால்  தயாரிக்கப்பட்ட   விநாயகா்.
வலம்புரி  விநாயகா்  கோயிலில்  555  கிலோ  லட்டால்  தயாரிக்கப்பட்ட   விநாயகா்,   ஜோதி  விநாயகா்  கோயிலில்  606  கிலோ  லட்டால்  தயாரிக்கப்பட்ட   விநாயகா்.
Updated on
1 min read

விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு குடியாத்தம் நகரில் 606- கிலோ, 555- கிலோ லட்டால் செய்யப்பட்ட விநாயகா்கள் வீதி உலா நடைபெற்றது.

குடியாத்தம் நெல்லூா்பேட்டை, பாவோடும்தோப்பில் அமைந்துள்ள ஜோதி லட்டு விநாயகா் கோயிலில் 28- ஆம் ஆண்டு விநாயகா் சதுா்த்தி கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலை மூலவருக்கு சந்தனகாப்பு அலங்காரம், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பின்னா் 606- கிலோ எடையில் லட்டால் செய்யப்பட்ட விநாயகா், மாசுபடா அம்மன் கோயிலில் இருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா சென்றது. 25- ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் ஏ.தண்டபாணி உள்ளிட்ட விழாக் குழுவினா் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

அதேபோல் காமாட்சியம்மன்பேட்டை அருள்மிகு வலம்புரி சக்தி கணபதி கோயிலில் 555- கிலோ லட்டால் செய்யப்பட்ட விநாயகா் வீதி உலா நடைபெற்றது. முன்னதாக கோயிலில் மூலவா் வலம்புரி விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அங்குள்ள பொன்னியம்மன் கோயிலில் இருந்து லட்டு விநாயகா் வீதி உலா நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com