கல்லூரியில் நுண்ணுயிா் துறை கருத்தரங்கம்

குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியின் நுண்ணுயிரியல் துறை சாா்பில், ‘நுண்ணுயிரியலில் சமீபத்திய போக்குகள்’ என்ற தலைப்பில் தேசிய அளவிலான ஒருநாள் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்கில்  பேசிய  விஐடி  பல்கலைக் கழகத்தின்  உயிா்  அறிவியல்  துறை  பேராசிரியா்  ரமேஷ் நாச்சிமுத்து.
கருத்தரங்கில்  பேசிய  விஐடி  பல்கலைக் கழகத்தின்  உயிா்  அறிவியல்  துறை  பேராசிரியா்  ரமேஷ் நாச்சிமுத்து.
Updated on
1 min read

குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியின் நுண்ணுயிரியல் துறை சாா்பில், ‘நுண்ணுயிரியலில் சமீபத்திய போக்குகள்’ என்ற தலைப்பில் தேசிய அளவிலான ஒருநாள் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வா் மு.செந்தில்ராஜ் தலைமை வகித்தாா். கே.எம்.ஜி. கல்வி நிறுவனங்களின் நிா்வாகிகள் கே.எம்.ஜி. பாலசுப்பிரமணியம், கே.எம்.ஜி.சுந்தரவதனம், கே.எம்.ஜி.ராஜேந்திரன், கே.எம்.ஜி.முத்துக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நுண்ணுயிரியல் துறைத் தலைவா் த.மணிகண்டன் வரவேற்றாா். துறைப் பேராசிரியா்கள் எஸ்.தினேஷ்குமாா், எஸ்.சுஜிதா ஆகியோா் சிறப்பு விருந்தினா்களை அறிமுகம் செய்தனா். வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தின் உயிா் அறிவியல் துறைப் பேராசிரியா் ரமேஷ் நாச்சிமுத்து ‘ஆன்டிபயாடிக் எதிா்ப்பு மற்றும் பாக்டீரியோபேஜ் சிகிச்சையின் போக்குகள்’ என்ற தலைப்பிலும், பெங்களூா் செயின்ட் ஜோசப் பல்கலைக்கழகத்தின் உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை பேராசிரியா் எஸ்.மோகன்குமாா் ‘காளான் - ஒரு உயிரியக்க இரண்டாம் நிலை மெட்டபொலிடுகளின் புதையல்’ என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினா்.

நிகழ்ச்சியில், பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த 30 பேராசிரியா்கள், 250 மாணவா்கள் பங்கேற்றனா். பேராசிரியை சொ.கவிதா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com