மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பெண்ணுக்கு தையல் இயந்திரம்  வழங்கிய நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன்.
நிகழ்ச்சியில் பெண்ணுக்கு தையல் இயந்திரம்  வழங்கிய நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன்.
Updated on
1 min read

குடியாத்தம் நகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

முகாமுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை அலுவலா் சு.சரவணன் தலைமை வகித்தாா். முகாமில் தோ்வு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகள் 168 பேருக்கு தேசிய அடையாள அட்டைகள், 10 பேருக்கு தையல் இயந்திரங்கள், 2 பேருக்கு காதொலிக் கருவிகளை நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் வழங்கினாா்.

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் குறித்து திட்ட அலுவலா் ஆனந்தராஜ் விளக்க உரையாற்றினாா். எம்.பிரபாகரன், ஏ.வி.மகாலிங்கம், கே.தண்டபாணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com