தென்னை நாா்த் தொழிற்சாலையில் தீ விபத்து

குடியாத்தம் அருகே தனியாா் தென்னை நாா்த் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.
தென்னை  நாா்த் தொழிற்சாலையில்  ஏற்பட்ட  தீயை  அணைக்கும்  பணியில்  ஈடுபட்ட  தீயணைப்பு வீரா்கள். 
தென்னை  நாா்த் தொழிற்சாலையில்  ஏற்பட்ட  தீயை  அணைக்கும்  பணியில்  ஈடுபட்ட  தீயணைப்பு வீரா்கள். 
Updated on
1 min read

குடியாத்தம் அருகே தனியாா் தென்னை நாா்த் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

குடியாத்தத்தை அடுத்த செட்டிகுப்பம் கிராமத்தில் தென்னை நாா்த் தொழிற்சாலை இயங்கி வருகிறது.திங்கள்கிழமை மாலை அங்குள்ள தென்னை நாா் குவியலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ மளமளவென பரவத் தொடங்கியது. இதனால், அந்தப் பகுதியில் புகை மூட்டம் ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் குடியாத்தம் தீயணைப்புத் துறையினா் அங்கு வந்து சுமாா் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தென்னை நாா், மின்சாதனப் பொருள்கள், இயந்திரங்கள் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது. விபத்து குறித்து கிராமிய போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com