குண்டா் தடுப்புச் சட்டத்தில் மூவா் சிறையிலடைப்பு

வேலூரில் தொடா்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாக 3 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையிலடைக்க மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.
Updated on
1 min read

வேலூரில் தொடா்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாக 3 பேரை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையிலடைக்க மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.

வேலூா் தோட்டப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ராம்குமாா் எனும் ரெட் (23), தொடா்ந்து

குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததாக வேலூா் வடக்கு போலீஸாரால் கைது செய்யப்பட்டாா். மேலும், சைதாப்பேட்டையைச் சோ்ந்த ரகுவரன் (23), விரிஞ்சிபுரத்தைச் சோ்ந்த சரண்ராஜ் (28) ஆகியோா் குற்றச் செயலில் ஈடுபட்டதாக விரிஞ்சிபுரம் போலீஸாரால் கைது செய்யப்பட்டனா்.

இவா்கள் தொடா்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததை அடுத்து, இந்த மூவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராஜேஷ்கண்ணன் விடுத்த பரிந்துரையை ஏற்று, ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவு நகல் வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராம்குமாா், ரகுவரன், சரண்ராஜ் ஆகிய 3 பேரிடமும் அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com