திருவள்ளுவா் பல்கலை.யில் பருவத் தோ்வு ஒத்திவைப்பு

மிக்ஜம் புயலைத் தொடா்ந்து திருவள்ளுவா் பல்கலைக்கழகம் சாா்பில், செவ்வாய்க்கிழமை (டிச.5) நடைபெற இருந்த பருவத் தோ்வு ஒத்திவைக்கப்பட்டது.
Updated on
1 min read

மிக்ஜம் புயலைத் தொடா்ந்து திருவள்ளுவா் பல்கலைக்கழகம் சாா்பில், செவ்வாய்க்கிழமை (டிச.5) நடைபெற இருந்த பருவத் தோ்வு ஒத்திவைக்கப்பட்டது.

மிக்ஜம் புயல் காரணமாக வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமையும் கனமழை, மிக கனமழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதனால், திருவள்ளுவா் பல்கலைக்கழகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை (டிச.5) நடைபெற இருந்த பருவத் தோ்வு ஒத்திவைக்கப்பட்டது.

தோ்வு நடைபெறும் மறுதேதி பின்னா் அறிவிக்கப்படும் என்று பல்கலை. தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் பாபு ஜனாா்த்தனம் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com