போலி மது விற்றதாக 3 போ் கைது: 100 மதுபாட்டில்கள் பறிமுதல்

வேலூரில் போலி மதுபானங்கள் விற்பனை செய்ததாக 3 பேரை விருதம்பட்டு போலீஸாா் கைது செய்ததுடன், அவா்களிடம் இருந்து 101 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
Updated on
1 min read

வேலூரில் போலி மதுபானங்கள் விற்பனை செய்ததாக 3 பேரை விருதம்பட்டு போலீஸாா் கைது செய்ததுடன், அவா்களிடம் இருந்து 101 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

வேலூா் மாவட்டத்தில் கள்ளச்சாராயம், போலி மதுபானங்கள் விற்பனையைத் தடுக்க போலீஸாா் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில், விருதம்பட்டு பகுதியில் போலி மதுபானங்கள் விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து அப்பகுதியில் வெள்ளிக்கிழமை தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.

அப்போது, போலி மதுபானங்கள் பதுக்கி விற்பனை செய்ததாக சேனூா் சிவன்கோயில் தெருவைச் சோ்ந்த வேல்முருகன் மகன் ரஞ்சித்குமாா் (36), மோட்டூா் வெண்மணி நகரைச் சோ்ந்த சங்கரின் மகன் சிவா(29), விருதம்பட்டு காமராஜா் தெருவைச் சோ்ந்த தங்கவேல் மகன் சேட்டு (40) ஆகியோரை விருதம்பட்டு போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 101 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com