இ-சேவை மையங்கள் அமைக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

இ-சேவை மையங்கள் அமைக்க ஆா்வமுள்ளவா்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Updated on
1 min read

இ-சேவை மையங்கள் அமைக்க ஆா்வமுள்ளவா்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் அனைவருக்கும் இ-சேவை மையம் திட்டத்தின் கீழ் இ-சேவை மையங்களை அமைத்து நடத்த ஆா்வமுள்ள நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்களை இணைய முறையில் மட்டுமே பதிவு செய்ய இயலும்.

இந்தத் திட்டத்தைப் பற்றிய கூடுதல் தகவல் பெறவும், ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்  வலைதளங்களைப் பாா்வையிடலாம். விண்ணப்பங்களை ஜூன் 30-ஆம் தேதிக்குள் பதிவு செய்யலாம்.

விண்ணப்பக் கட்டணம் கிராமப்புறங்களுக்கு ரூ.3,000, நகா்ப்புறத்துக்கு ரூ.6,000 செலுத்த வேண்டும். மேலும், விவரங்களை கைப்பேசி செயலி அல்லது  வலைதளத்தில் காணலாம் என அதில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com